Wednesday, July 22, 2020

கள்ளிமுட்கள்

கவிவனத்தில் வளர்ந்த 
கள்ளிச்செடி நான் 
சொல்வதைக் கேளுங்கள்

 கவிதைகளை தொடாதீர்கள் 
அதனை ஆராய முற்படாதீர்கள் 
தூரமிருந்து பாருங்கள் 
இரசியுங்கள் 

காயஊற்றில் வளர்ந்த 
கள்ளிமுட்கள் அவை 
அதன் ஆழ அடர்த்தியை காண 
அருகில் நெருங்கினால் 
சில நேரங்களில் 
உங்களின் இதயத்தையும்
பதம் பார்க்க நேரிடலாம்.

    #நா. ஹரிஹரன#
     22.07.2020 ;1.15pm

No comments:

Post a Comment

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்