Sunday, June 14, 2020

தொடரும்

பேசித் தீர்த்துவிட்டோம்
பேச இனி ஒன்றுமில்லை 
என்றானபோது,
பேசுவதை நிறுத்திக்கொண்டோம். 

உன்னைப்பற்றி வினவ 
என்னிடம் என்ன விருக்கிறது.? 
என்னைப்பற்றி வினவ 
உன்னிடமும் என்ன விருக்கிறது.? 
என்ற வினாக்குறி எழுந்த

இந்த அதிகாலைக் குளிரில் 
இருவரும் நனைந்துகொண்டு 
பேசஇனி என்னவிருக்கிறது என்பதையே
நினைவுகளால் மொய்த்து கிடக்கிறோம்.

நம் மனப்பெட்டிக்குள் 
இறந்துகிடக்கும் நம் சொற்கள் 
ஒவ்வொன்றிற்கும் 
இப்போது உயிரூட்ட 
நாம் திணறிக்கொண்டிருக்கிறோம். 

அருவியிலிருந்து விழுந்த 
அந்த முதல் நீர்துளியை தொடர்ந்து 
ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சியை போல்
நாம் கதைக்க காரணாமாகவிருந்த 
அந்த முதல் வார்த்தையை
இருவரும் தேடியெடுத்து 
இதயத்தில் அமர்த்திகொள்வோம் 
இப்போது வார்த்தைகள் பின் 
தொடரும்... 
                 #நா. ஹரிஹரன்#
           நேரம்:7.09pm(11.06.2020)
            


No comments:

Post a Comment

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்