அவர்களிடம் ,
கவிதை எழுதுபவர்களோடு,
டைரி நனைப்பவர்களோடு,
அனுதினமும் எதையாவது
கிறுக்குபவர்களோடு,
சற்று தள்ளியே இருங்கள்.
இவையாவும் முடியாவிட்டால்
கண்ணீரால் நனைந்த
அவர்களின்
காகித கைக்குட்டைகளையாவது
காணாமல் இருங்கள்.
அதில் படிந்திருக்கும்
உண்மை கறைகளில்
உங்கள் அழுக்குகளும்
ஒட்டியிருக்கலாம்.
#நா. ஹரிஹரன்#
நேரம்:7.30pm(11.06.2020)
No comments:
Post a Comment