Thursday, June 11, 2020

எச்சரிக்கை

சற்று எச்சரிக்கையாக இருங்கள் 
அவர்களிடம் ,
கவிதை எழுதுபவர்களோடு, 
டைரி நனைப்பவர்களோடு, 
அனுதினமும் எதையாவது 
கிறுக்குபவர்களோடு,
சற்று தள்ளியே இருங்கள்.

இவையாவும் முடியாவிட்டால் 
கண்ணீரால்  நனைந்த 
அவர்களின் 
காகித கைக்குட்டைகளையாவது
காணாமல் இருங்கள். 

அதில் படிந்திருக்கும் 
உண்மை கறைகளில் 
உங்கள் அழுக்குகளும் 
ஒட்டியிருக்கலாம். 
       #நா. ஹரிஹரன்#
    நேரம்:7.30pm(11.06.2020)
    

No comments:

Post a Comment

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்