Monday, June 8, 2020

வெளியேற்றம்

என்றோ ஒருநாள் நாம் 
பிரியநேரிடலாம் என்பதை 
நானறிவேன் -அதுவரை 
பிரியாமலிருப்போம். 

நம் பிரிதல் 
நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்டதில்லை.
இருந்தும் நாம் 
வெளியேறி கொண்டிருக்கிறோம் 
உன்னிலிருந்து நானும்,
என்னிலிருந்து நீயும். 

இத்துனை நிகழ்வுகளிலும் 
ஒரேயொரு மகிழ்ச்சி என்னவெனில் 
நம் ஆன்மாக்கள் 
காதலெனும் ஆலகாலம் அருந்தியும் 
இன்னும்  முறியாமல் கிடக்கிறது.

      நேரம் :2.56am (9.06.2020)
  #நா. ஹரிஹரன்#

No comments:

Post a Comment

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்