பிரியநேரிடலாம் என்பதை
நானறிவேன் -அதுவரை
பிரியாமலிருப்போம்.
நம் பிரிதல்
நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்டதில்லை.
இருந்தும் நாம்
வெளியேறி கொண்டிருக்கிறோம்
உன்னிலிருந்து நானும்,
என்னிலிருந்து நீயும்.
இத்துனை நிகழ்வுகளிலும்
ஒரேயொரு மகிழ்ச்சி என்னவெனில்
நம் ஆன்மாக்கள்
காதலெனும் ஆலகாலம் அருந்தியும்
இன்னும் முறியாமல் கிடக்கிறது.
நேரம் :2.56am (9.06.2020)
#நா. ஹரிஹரன்#
No comments:
Post a Comment